BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

நகை கடன் தள்ளுபடி செய்யாதது குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் கேள்வி கேட்ட பெண்ணை தரம் தாழ்ந்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் இன்று தஞ்சை வந்த அவர் 51 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் விக்னேஷ் குமார் ராஜாவுக்கு வாக்கு சேகரித்தபோது அந்த பகுதியில் கிடந்த குப்பைகளை பாஜக நிர்வாகிகள் உடன் இணைந்து பொன் ராதாகிருஷ்ணன் அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

 

பின்னர் மானம்புச்சாவடி பகுதியில் கொட்டும் மழையில் குடைபிடித்து நின்ற பொது மக்களிடம் வாக்கு சேகரித்த பொன் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் தான் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் என்பதை உணர வேண்டும் தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது நகை கடனை தள்ளுபடி செய்யுமாறு கோரிய பெண்ணை மிக மோசமான கேவலமான விமர்சனம் செய்துள்ளார் இதற்காக உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றார்

பேட்டி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னாள் மத்திய அமைச்சர்

 

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )