BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

தஞ்சை கீழ்அலங்கம் மல்லனப்பா சந்து பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். தி.மு.க. 15&வது வார்டு பிரதிநிதி.
இவர் இன்று தனது மனைவி, மகளுடன் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். திடீரென குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி தர்ணாவில் ஈடுபட அனுமதி கிடையாது. உங்கள் கோரிக்கையை மனுவாக அளியுங்கள் என கூறினர். இதனை தொடர்ந்து ராஜமாணிக்கம் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:&
நான் தற்காலிகமாக பாலோப்பநந்தவனத்தில் வசித்து வருகிறேன்.

43 ஆண்டுகளாக மாநகராட்சி 15&வது வார்டில் வசித்து வந்தேன். எனவே எனக்கு அந்த வார்டு முகவரியில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்நிலையில் என்னுடைய பெயரை என் அனுமதியின்றி மறைமுகமாக இணையதளத்தின் மூலம் வாக்காளர் பட்டியலில் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் நீக்கம் செய்துள்ளார்.

நான் சிப்ட் மாறிவிட்டேன் என காரணம் கூறினர். ஆனால் எனது மனைவி, மகள் ஆகியோரது வாக்கை நீக்கவில்லை. குறிப்பாக அந்த நபர் வாக்கு உரிமம் உள்ளது 15&வது வார்டில். அவர் வசிப்பது 25&வது வார்டு கொண்டிராஜபாளையம் ஆகும். விசார¬ணை செய்யாமல் என் வாக்கு உரிமத்தை நீக்கல் செய்த நகராட்சி ஊழியர்களை விசாரிக்க வேண்டும். சம்பந்தபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் இந்த தேர்தலில் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் நான் இறந்து விடுவேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )