BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.

தஞ்சை பெரிய கோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

இக்கோவிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்து கட்டிடக்கலையை பார்த்தும் சுவாமியை தரிசித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் மாசிமாத முதல் பிரதோஷ தினத்தை முன்னிட்டு தஞ்சை பெரிய கோவிலில் உள்ள மஹா நந்தியம்பெருமானுக்கு திரவிய பொடி மஞ்சள் பால் தயிர் சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று.

 

மகா தீபாராதனை காட்டப்பட்டது, இதில் ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )