ஆத்தூர் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் விழா
ஆத்தூர் மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் விழா.

ஆத்தூர் கெங்கவல்லி மற்றும் தலைவாசல் புகைப்பட கலைஞர்கள் நல சங்கம் சார்பில் நடந்த மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் விழாவில் மாநில தலைவர் பங்கேற்பு,
தமிழகம் முழுவதும் உள்ள புகைப்படக்கலைஞர்கள் பயன்பெறும் வகையில் நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை பெறுவதற்காக A C S மருத்துவ கல்லூரி மற்று மருத்துவ மனையுடன் இணைந்து கட்டணமில்லா மருத்துவம் பெற நலம் மருத்துவ உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது மேலும் இத்திட்டம் புகைப்படக் கலைஞர்கள்மற்றும் அவரது குடும்பத்தார் களும் பயன் பெறும் வகையில் இந்த இந்த காப்பீட்டு திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு அதற்கான அட்டையை வழங்கிவருகிறது,இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றபுகைப்படக் கலைஞர்களுக்கான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்கும் விழா நடைபெற்றது இந்த விழாவில் தமிழ்நாடு வீடியோ போட்டோ அசோசியோசன் மற்றும் சேலம் மாவட்ட புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் இன்று ஆத்தூர் புகைப்பட கலைஞர்களுக்கு மாநில தலைவர் சிவக்குமார் தலைமையில் மருத்துவ காப்பீட்டு அட்டையை 100க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது,இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று புகைப்பட கலைஞர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் ஆத்தூர் ரமேஷ் ரமேஷ் செயலாளர் ஜெகதீஷ் பொருளாளர் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
