அம்பாசமுத்திரத்தில் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்டு மார்க்சிய கம்யூனிஸ்டு விடுதலை சிறுத்தை ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதன் ஒரு பகுதியாக அம்பாசமுத்திரம் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் வைத்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகன் நகர செயலாளர் வடிவேல் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் நமச்சிவாயம் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்டு நிர்வாகிகள் பாஸ்கர் ஜெகதீஸ் சுரேஷ்
கண்ணன் மகளிரணி சபியா ள் ஆகியோர் உட்பட விடுதலை சிறுத்தை கட்சியினர் கலந்து கொண்டார்கள் ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசைக் .கண்டித்தும் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
CATEGORIES Uncategorized
