ஈரோடு, நீரோடைகளில் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணி.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெட்டிசெவியூர் ஊராட்சியில் மாவட்ட நிர்வாகத்துடன் வாழும்கலை அமைப்பினர் இணைந்து நீரோடைகளில் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணிகளில் முதற்கட்டமாக 7இடங்களில் ரூ.8இலட்சத்து 26ஆயிரம் மதிப்பீட்டில் நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன்உன்னி,


மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, ஊராட்சி மன்ற தலைவர் மகுடேஸ்வரன், வாழும் கலை சர்வதேச ஆசிரியர் சசிகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
CATEGORIES Uncategorized
