BREAKING NEWS

திருப்பதி ஏழுமலையானுக்கு நேற்று ஒரே நாளில் திருநெல்வேலி பக்தர்களால் ரூ.10 கோடி நன்கொடை வழங்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையானுக்கு நேற்று ஒரே நாளில் திருநெல்வேலி பக்தர்களால் ரூ.10 கோடி நன்கொடை வழங்கப்பட்டது.

திருநெல்வேலியைச் சேர்ந்த தொழிலதிபரான கோபால் பாலகிருஷ்ணன் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 7 திட்டங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் ரூ.7 கோடி நன்கொடை வழங்கினார். இது தவிர திருநெல்வேலியைச் சேர்ந்த மூன்று தனியார் நிறுவனங்கள் தலா ஒரு கோடி வீதம் ரூ.3 கோடி என மொத்தம் ரூ.10 கோடி நன்கொடை வழங்கப்பட்டது.

தேவஸ்தான வரலாற்றில் ஒரே நாளில் ரூ.10 கோடி நன்கொடை பெறப்படுவது இதுவே முதல்முறை என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி தெரிவித்தார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )