BREAKING NEWS

குளித்தலையை அடுத்த மருதூர் செக்போஸ்ட் அருகே டிவிஎஸ் 50 பைக் மீது பின்னால் வந்த தனியார் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு.

குளித்தலையை அடுத்த மருதூர் செக்போஸ்ட் அருகே  டிவிஎஸ் 50 பைக் மீது பின்னால் வந்த தனியார் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு.

கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி மணத்தட்டையை சேர்ந்தவர் மகாமுனி 29. பேக்கிரி மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த கந்தன் 54.என்பவருடன் டிவிஎஸ் 50 இருசக்கர வாகனத்தில் வலையப்பட்டியில் உள்ள கோவில் திருவிழா கலை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் பைக்கில் மறுநாள் அதிகாலையில் வீடு திரும்பியுள்ளனர்.

திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மருதூர் செக்போஸ்ட் அருகே வந்தபோது பின்னால் திருச்சியிலிருந்து குளித்தலை நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )