கும்பகோணம் மாநகராட்சி, தாராசுரம் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று, “என் குப்பை என் பொறுப்பு” என்கிற விழிப்புணர்வு

கும்பகோணம் மாநகராட்சி, தாராசுரம் பகுதிகளில் வீடுவீடாகச் சென்று, “என் குப்பை என் பொறுப்பு” என்கிற விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம் தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் , தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் கும்பகோணம் மாநகராட்சி மேயர் க.சரவணன் மாநகராட்சி துணை மேயர் சு.ப.தமிழழகன், ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவர் தி.கணேசன் , தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் இரா.அசோக்குமார் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.கே.பாஸ்கர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரிஅசோக்குமார் வருவாய் கோட்டாட்சியர் லதா , மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், நகர் நல அலுவலர் மருத்துவர் பிரேமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
