தஞ்சையில் முதன்முறையாக மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி நடைபெற்றது 80 மாணவ-மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்ட வாள்வீச்சு விளையாட்டு கழகம் சார்பில் முதல் முறையாக மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டி தஞ்சையில் இன்று நடைபெற்றது இதில் தஞ்சாவூர் கும்பகோணம் திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 80 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


6 வயது முதல் 17 வயது வரையிலான மாணவ மாணவிக்கு 8 பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது மாவட்ட அளவில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.



இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
CATEGORIES தஞ்சாவூர்
