தஞ்சை கல்லணை கால்வாய் புது ஆற்றில் குளித்த கல்லூரி மாணவன் நீரில் மூழ்கும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் (குருநானக் கல்லூரி) பி.எஸ்.சி விசுவல் கம்யூனிகேஷன் படித்து வரும் மாணவர்கள் நித்தின், நிதர்சன் இருவரும் நண்பர்கள். இவர்கள் இரு சக்கர வாகனத்தில் 11ம் தேதி தஞ்சைக்கு சுற்றுலா வந்தனர்.


கல்லணை கால்வாய் புது ஆற்றில் இருவரும் குளித்து உள்ளனர். நித்தின் குளித்து விட்டு கரை ஏறிய நிலையில் குளித்து கொண்டு இருந்த நிதர்சன் நீரில் மூழ்கி ஆற்றில் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார்.


நிதர்சன் தண்ணீரில் மூழ்கும் இறுதி நிமிடங்கள் நெஞ்சை பதை பதைக்க வைக்கும் வீடியோ.
CATEGORIES தஞ்சாவூர்
