காவிரியாற்றில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆற்றில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டுமென தஞ்சை ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கவின் மிகு தஞ்சை இயக்கம் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் நட்டு வளர்க்கும் திட்டத்தை தொடங்கிவைத்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அளித்த பேட்டியில்
குறுவை சாகுபடிக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் அதிக அளவு திறந்து விடப்படுவதால் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் உள்ளிட்ட ஆறுகளில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆற்றில் இறங்கி குளிப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பேட்டி தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தஞ்சை மாவட்ட ஆட்சியர்.
