தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒபிஎஸ் பக்கம் தான் இருக்கிறார்கள். இந்தக் கூட்டம் வருகிற ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களில் நிர்வாகிகள் பங்கேற்பது எவ்வாறு நடந்து கொள்வது என்பதற்காக வழக்கமாக நடத்தப்படும்.

தேனி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒபிஎஸ் பக்கம் தான் இருக்கிறார்கள். இந்தக் கூட்டம் வருகிற ஜூன் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களில் நிர்வாகிகள் பங்கேற்பது எவ்வாறு நடந்து கொள்வது என்பதற்காக வழக்கமாக நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டம் தான்.
இது அவசரக் கூட்டம் அல்ல. ஜூன் 23 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழு, செயற்குழு கூட்டமானது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குபிறகு நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் தேர்வான நிர்வாகிகள் தேர்வு ஒப்புதல் பெறுவதற்காக தான். இதில் ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படாது. ஒற்றைத்தலைமை ஏற்ற தீர்மானம் கொண்டுவந்தால் அதை தேனி மாவட்ட நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
அதேபோல எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கட்சியில் இருந்தவர்கள், தற்போது விலகியிருப்பவர்கள் என அனைவரும் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதாவை தலைவர்களாக ஏற்றுக்கொள்பவர்கள் அதிமுகவில் இணையலாம்.
