திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே முன்விரோதம் காரணமாக கூலி தொழிலாளியின் கழுத்தை அறுத்து கொலை செய்த இருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (26). இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் கொலை முயற்சி, திருட்டு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும், 2 குண்டா் தடுப்புச் சட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கடந்த மார்ச் மாதம் ஊர் திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறில் மனோஜ் ஒருவரை கத்தியால் குத்தியுள்ளார். இந்த வழக்கில் அவரை காவல்துறையினர் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சூழலில், கடந்த வாரம் மனோஜ் ஜாமீனில் வெளியே வந்தார்.
