ஈரோடு AITUC உள்ளாட்சித்துறை பணியார் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.

ஈரோடு மாவட்டம் பவானி யில் AITUC உள்ளாட்சித்துறை பணியார் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பவானி நகாராட்சி முன்பு சங்க ஒன்றிய தலைவர் கே.பி. நடராஜ், நகராட்சி சங்க துணை தலைவர் ஆர்.செல்லப்பன் தலைமையில் நடைபெற்றது. சங்க நிர்வாகிகள் குப்புராஜ், ரங்கநாதன் ,தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். சிபிஐ வடக்கு மாவட்ட செயலாளர் டி.ஏ.மாதேஸ்வரன், நகராட்சி சங்க தலைவர் ப.மா.பாலமுருகன், AITUC தொழிற்சங்க தலைவர் கே.சந்திரசேகர், கட்டிட சங்க மாவட்ட செயலாளர் எஸ்.கந்தசாமி, AITUC மாவட்ட செயலாளர் எல்.சிவராமன்,ஆகியோர் உரையாற்றினர் சிபிஐ ஒன்றிய செயலாளர் வி.ஜி. அருள்,மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பி.வி. பாலதண்டாயுதம், மாவட்டக்குழு உறுப்பினர் பி.எஸ். பழனிச்சாமி, சிபிஐ நகர துணை செயலாளர் எம்.ஆர்.சுரேஷ்குமார்,ஒன்றிய பொருளாளர் அபிபுல்ரகுமான்,தொழிற்சங்க நிர்வாகிகள் கே.எம்.கோபால், எஸ்.பி.நஞ்சப்பன், செல்லமுத்து, கே.எஸ்.நாகராஜ் Aiyf நகர செயலாளர் எஸ்.தாமோதரன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று முழக்கமிட்டனர். நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
