BREAKING NEWS

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு.

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்வு.

திருப்பூர் மாவட்டம் கல்வித்துறை சார்பாக உடுமலை நகராட்சிக்குட்பட்ட தளி ரோட்டில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பாக “நம் பள்ளி நம் பெருமை” மாணவர்கள் பெற்றோர்கள் மூலமாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக 23 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சமூக சேவகர் ஜெ.ஷாஜாதிபர்வீன் உடுமலை நகர மன்ற 12 வது வார்டு உறுப்பினர் வின்சென்ட் ஆகிய இரு நகர் மன்ற உறுப்பினர்களும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக மாணவர்கள் பெற்றோர்கள் மூலம் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட இருவருக்கும் பள்ளிக்கல்வித்துறை மூலமாக சான்றிதழ் வழங்கப்பட்டது . நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட கல்வி துறை அதிகாரி கு.பழனிச்சாமி தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜசேகர் முன்னிலையில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )