பேர்ணாம்பட்டு அம்மா உணவகத்தில் 5 சமையல்காரர்கள் பணியிட நீக்கம் நகராட்சி ஆய்வாளர் சுபாஷினி அவர்கள் அதிரடி நடவடிக்கை.

வேலூர்: பேர்ணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் சுபாஷினி நேற்று பேரணாம்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கிவரும் அம்மா உணவகத்திற்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார் .அங்கு சமைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்கள் சுகாதாரமான முறையில் தரமாக சமைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார் .
அப்போது அங்கு பணிபுரியும் 12 பணியாளர்களில் ஏழு பேர் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். சமையல் பணியாளர்கள் முருகம்மா, நளினி ,வசந்தி ,லட்சுமி, ரம்யா ஆகிய ஐந்து பணியாளர்கள் வரவில்லை இதை எடுத்து அவர்களை பணியிட நேக்கம் நீக்கம் செய்து உத்தரவு உத்தரவிட்டார் ரோடு பஜார் திரு ஆம்பூர் ரோடு உள்ள பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் டீக்கடைகள் மற்றும் கடைகள் என மொத்தம் 25க்கும் மேற்பட்ட கடைகளில் நகராட்சி ஆணையாளர் ஆய்வு செய்து பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தார் அவருடன் நகராட்சி துப்புரவு ஆய்வா ளர் சீனிவாசன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் சென்றிருந்தனர்.
