BREAKING NEWS

திமுக விலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அரச்சலூர் பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலர் கே.கவின் குமார்.

திமுக விலிருந்து விலகி  பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அரச்சலூர் பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலர் கே.கவின் குமார்.

மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட அரச்சலூர் பேரூராட்சி 6வது வார்டு கவுன்சிலர் கே. கவின் குமார் அவர்கள் இன்று 27.07.2022 புதன்கிழமை அரச்சலூர் குல்ரங்கன்பாளையம் அவரது இல்லத்தில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் மற்றும் தெற்கு மாவட்ட தலைவர் எஸ். டி.செந்தில்குமார் அவர்கள் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

 

நடைபெற்ற நிகழ்வின்போது மாவட்ட துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம், மாவட்ட விவசாய அணி பொதுக்குழு உறுப்பினர் ராமநாதன், மாவட்ட மகளிர் அணி தலைவர் புனிதம் ஐயப்பன், மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார், முன்னாள் ஒன்றிய தலைவர் செங்கோட்டையன், விவசாய அணி பொதுச் செயலாளர் சந்திரசேகர், பேரூர் தலைவர் பழனிச்சாமி, மண்டல் துணைத்தலைவர் ராமசாமி, வர்த்தக அணி ஒன்றிய தலைவர் எஸ். தேவராஜ், கூட்டுறவு பிரிவு செயலாளர் ஜெகதீசன் மற்றும் ராசு என்கின்ற சண்முகசுந்தரம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )