முன்னீர்பள்ளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் மனிதநேய மக்கள் மனிதநேய மக்கள் கட்சியினர் மனு.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மேல முன்னீர்பள்ளம் மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து மின்விளக்குகளும் கடந்த இரண்டு மாதங்களாக ஒளிரவில்லை. கடுமையான இருட்டினால் மேம்பாலத்தில் அதிகமான விபத்துக்கள் நடந்துள்ளது.

அனைத்து மின் விளக்குகளும் ஒளிர வைக்க வேண்டி மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை தலைவர் தேயிலை மைதீன் தலைமையில் துணைச் செயலாளர் அ.காஜா, தெற்குபகுதி செயலாளர் அர்ஷத் கரிம், ஆட்டோ ஓட்டுநர்கள் சேக், நிசார் , காதர் பாட்சா ஆகியோர் முன்னீர்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் உமா வெங்கடேஷ் அவர்களிடம் மனு கொடுத்தனர். மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
