தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உதவி காவல் ஆய்வாளர் ஒருதலை பட்சமாத செயல்படுவதாக கூறி தாய் மற்றும் மகள் தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு.

சொத்துப் பிரச்னை தொடர்பான வழக்கு விசாரணையில் ஒருதலை பட்சமாக செயல்படும் தேனி மாவட்டம் வீரபாண்டி காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் வரதராஜன் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி
தேனி பாலார்பட்டியைச் சேர்ந்த சரோஜா மற்றும் அவரது மகளும் தேனி ஆட்சியர் நுழைவாயில் முன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தண்ணீரை அவர்கள் மேல் ஊற்றினர் பின்னர் காவல் துறையினர் 108ஆம்புலன்ஸிற்கு
தகவல் கொடுத்தனர.
பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாலார்பட்டியைச் சேர்ந்த தாய் மகள் ஆகிய இருவரும் பெற்றோல் ஊற்றிய சம்பவம் ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.
CATEGORIES தேனி