6 வது நபர் உடல் மீட்பு தஞ்சாவூர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கிய ஆறு பேரில் நேற்று 4 பேர் உடல் மீட்கப்பட்டது இன்று இருவர் உடல் மீட்பு.

தஞ்சை மாவட்டம் பூண்டி செங்கரையூர் பாலம் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த, தூத்துக்குடி மாவட்டம் சிலுவைபட்டி கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் உடல்களும் சடலமாக மீட்கப்பட்டு,
திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவடைந்த நிலையில் ஆறு பேருக்கும் தமிழக அரசு உடனடியாக நிவாரணம் அறிவிக்க வேண்டும் எனவும்,
நிவாரணம் அறிவிக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை எனக்கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ளே தற்போது காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
CATEGORIES தஞ்சாவூர்