BREAKING NEWS

கோவில்பட்டி அருகே மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் பூ வியாபாரி வெட்டி படுகொலை.

கோவில்பட்டி அருகே மதுபான கடையில் ஏற்பட்ட தகராறில் பூ வியாபாரி வெட்டி படுகொலை.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மஞ்சநம்பிக் கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் அழகுதுரை(28) வயது பூ வியாபாரம் செய்து வருகிறார்.

 

 

இவர் இன்று இரவு அவர் வீட்டின் வெளியே அமர்ந்திருக்கும் போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர் இதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக கயத்தார் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

 

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த கயத்தார் காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

கொலை சம்பவம் தொடர்பாக கயத்தாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

 

 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இன்று மாலை செட்டிகுறிச்சி மதுபான கடையில் அழகு துரைக்கும் அங்கிருந்த சிலருக்கும் முதலில் தகராறு ஏற்பட்டதாகவும் அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அழகுதுரை தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

 

இந்நிலையில் சிலர் இரவு அழகு துரையின் வீட்டிற்கு வந்து அங்கு வீட்டின் வெளியே அமர்ந்திருந்த அழகு துரையை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக தெரியவந்துள்ளது.

 

கொலைச் சம்பவத்தை எடுத்து மஞ்சநம்பி கிணறு செட்டிகுறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )