தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெற்ற அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் திட்டத்தில் மூன்றாவது கட்டமாக 30 தன்னார்வலர்களுக்கு 12 நாள் சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
![தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெற்ற அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் திட்டத்தில் மூன்றாவது கட்டமாக 30 தன்னார்வலர்களுக்கு 12 நாள் சிறப்பு பயிற்சி நடைபெற்றது. தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெற்ற அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் திட்டத்தில் மூன்றாவது கட்டமாக 30 தன்னார்வலர்களுக்கு 12 நாள் சிறப்பு பயிற்சி நடைபெற்றது.](https://aramseithigal.com/wp-content/uploads/2022/10/IMG-20221005-WA0126.jpg)
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெற்ற அப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் திட்டத்தில் மூன்றாவது கட்டமாக 30 தன்னார்வலர்களுக்கு 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் 24.09.22 முதல் 05.10.22 வரை நடைபெற்றது.
பேரிடர் மேலாண்மையில் சிறந்த பயிற்றுநர்கள் கொண்டு பேரிடர் மேலாண்மை, பேரிடர் தயார்நிலை, நிலநடுக்கம், நிலசரிவு, வெள்ளம், சுனாமி, சூறாவளி, இடி மின்னல், வறட்சி, அனல் காற்று, குளிரலை, அடிப்படை தேடல் & மீட்பு, உடல் நலம், முதலுதவி, உயிர் காக்கும் மருத்துவ சேவை, பாம்பு கடி, தீ பாதுகாப்பு, ரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி அவசர நிலை பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கையொப்பமிட்ட சான்றிதழ் மற்றும் அடையாள அட்டையினை பேரிடர் வட்டாட்சியர் திருமதி ராஜேஸ்வரி முன்னிலையில் ரெட் கிராஸ் ஆலோசனைக் குழு தலைவர் டாக்டர். வரதராஜன் அவர்கள் வழங்கினார்கள். மேலும் இப்பயிற்சியில் சிறந்த தன்னார்வலராக செல்வன். சிபி வர்மா, செல்வி. சுபலட்சுமி சிறந்த கையேடு பராமரித்த செல்வன். அர்ஜுன்,
சிறந்த அட்டவணை தயாரித்த துர்கா தேவி, சுபலட்சுமி, வீரமணி குழுவினர், சிறந்த நாள் தொகுப்பினை தயாரித்த செல்வன். முகமது இர்பான், செல்வி. செல்வ லட்சுமி மற்றும் சிறந்த செயல்முறை விளக்கம் வழங்கிய ஜெயசீபா, திவ்யதர்ஷினி, செல்வ லட்சுமி, சிபி, அர்ஜுன், வீரமணி, உதயா குழுவினரை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக பயிற்சியில் பங்கேற்ற அனைத்து தன்னார்வலர்களும் பேரிடர் மீட்பு, முதலுதவி, கயிறு முடித்தல், காயங்களுக்கு கட்டு கட்டுதல், பாதிக்கப்பட்டவர்களை சுமந்து செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்முறை விளக்கத்தினை செய்து காண்பித்தனர்.
இந்நிகழ்வில் ரெட்கிராஸ் துணை சேர்மன் திரு. ராகவ் பிரகாஷ், நிதிக் குழு சேர்மன் திரு. ஜெயக்குமார், இரத்த வங்கி குழு தலைவர் திரு அரிஸ்டோ, துணை கிளைகள் குழு தலைவர் திரு நாசர், சுவாமிமலை ரெட்கிராஸ் தலைவர் திரு. ராகவ நாராயணன் ரெட்கிராஸ் பயிற்றுநர் திரு. பிரகதீஷ், பெஞ்சமின், துரை மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இம்முகாமிற்கான ஏற்பாடுகளை ரெட்கிராஸ் பொருளாளர் பொறியாளர் முத்துக்குமார், பயோகேர் திரு. முத்துக்குமார், பேரிடர் கட்டுப்பாட்டு மையம் மற்றும் ரெட்கிராஸ் ஊழியர்கள் செய்திருந்தனர்.
அப்தமித்ரா மூன்றாவது கட்ட பயிற்சி 08.10.22 அன்று துவங்குகிறது. இப்பயிற்சியில் பங்கேற்க விரும்பும் தஞ்சாவூர் மாவட்டத்தை சார்ந்த 18 வயது முதல் 40 வயது உட்பட்டவர்கள் 7825044897, 9442894184 என்ற எண்களை தொடர்பு கொண்டு பதிவு செய்து பங்கேற்கலாம்.