BREAKING NEWS

சுற்றுலா பேருந்து மோதி பயங்கர விபத்து- 9 பேர் உயிரிழப்பு.

சுற்றுலா பேருந்து மோதி பயங்கர விபத்து- 9 பேர் உயிரிழப்பு.

உதகைக்கு சுற்றுலா சென்ற பேருந்து மோதி விபத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் உட்பட 9 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

 

கேரளா மாநிலம் பாலக்காட்டில் உள்ள வடக்கஞ்சேரி அருகே மங்கலத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற சுற்றுலா அரசு பேருந்து மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

 

மேலும்,38 பேர் காயமடைந்தனர். எர்ணாகுளத்தில் இருந்து தனியார் பள்ளி பேருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு உதகைக்கு சுற்றுலா சென்றது.

 

அப்போது கோவை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

 

விபத்தில் உயிரிழந்தவர்களில் 5 பேர் மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் என்றும் 4 பேர் அரசு பேருந்தில் பயணம் செய்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

 

படுகாயமடைந்த 38 பேருக்கு திருச்சூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )