BREAKING NEWS

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி….!!! எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு…!

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி….!!! எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு…!

 

சேலம் மாவட்டம் எடப்பாடி 12-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரவி உட்பட 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி எடப்பாடியில் ஊர்வலமாக சென்று அதிமுகவில் இணைந்தனர்.

 

எடப்பாடி பயணியர் மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இணைந்து கொண்டனர். முன்னதாக, முன்னாள் முதலமைச்சரும்,

 

 

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அனைத்தும் பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விடியா திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டப்பட்டு அதில், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்வதற்காக அவசர சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்தி வந்துள்ளன.

 

 

அதை இந்த திமுக அரசு நிறைவேற்றினால் விலைமதிப்பற்ற மக்களின் உயிரை காப்பாற்றலாம்” என்றார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )