தஞ்சை ரயில் நிலையம் முன்பு இன்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாநகராட்சி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
மேலும் அவர்களும் பேரணியாக புறப்பட்டு பிளாஸ்டிக்கை தவிர்ப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் கல்லூரி மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.
பிளாஸ்டிக்கை தவிர்ப்போம், மஞ்சப்பையை பயன்படுத்துவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். பேரணியானது அண்ணா நூற்றாண்டு மண்டபத்தில் நிறைவடைந்தது.
CATEGORIES தஞ்சாவூர்
TAGS அரசியல்ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுமேயர் சண் ராமநாதன்