BREAKING NEWS

கடலூர், வேப்பூரில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.

கடலூர், வேப்பூரில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி ஆர்ப்பாட்டம்.

 

– செய்தியாளர் கொ.விஜய்.

 

தமிழகத்தில் விசிக, கூட்டணிக் கட்சிகள் மற்றும் 72க்கும் மேற்பட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சமூக நல்லிணக்க மனிதச்சங்கிலி 500க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றது.

 

இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்ரோடு பகுதியில் நடந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலியில் விசிக ஒன்றிய செயலாளர் எல் சந்தோஷ், நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய தலைவர் கெங்காதரன், சிபிஐ அருள்மணி, காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் முருகானந்தம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஒன்றிய செயலாளர் ஜெயபால் ஆகியோர் தலைமையில் ஏராளமான

 

 

 கூட்டணி கட்சி நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் ஃபாசிச, சனாதன, சங்பரிவார் கும்பலுக்கு தமிழகத்தில் ஒருபோதும் இடமில்லை என்ற முழக்கங்களை எழுப்பி ஒன்றிய அரசுக்கு எதிராக மனித சங்கிலியில் ஈடுபட்டனர்.

 

 

இந்த மனித சங்கிலியில் சிறப்பு அழைப்பாளர்களாக, மக்கள் தொண்டன் சு திருமாறன், வழக்கறிஞர் பொன்.பெரியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேலும் விசிக கட்சியை சேர்ந்த ஒன்றிய பொருளாளர் சாண்டிலியன், ஒன்றிய நிர்வாகி செல்வகுமார், அர்ஜுனன், மாவட்ட நிர்வாகி தமிழ்ச்செல்வன்,
தமிழ்மணி,

 

மற்றும் நிர்வாகிகள் பெரியசாமி, சுந்தர், பிரபு, சூரிய கலைவாணன், முனுசாமி, செல்வ. சக்திவேல், காமராஜ், சிவா கருப்புசாமி, பழக்கடை பிரகாஷ் , தர்மலிங்கம் சுப்பிரமணியன், தட்சிணாமூர்த்தி, செந்தில், சிவானந்தம், சுப்பிரமணியன், ராமச்சந்திரன், சேப்பாக்கம் கெங்கா முத்து வளவன்,

 

விசிக கிளைச் செயலாளர் பாக்யராஜ், பெரியநெசலூர் பொன்னுசாமி, பூலாம்பாடி பெரியசாமி நாரையூர் செல்வகுமார் மற்றும் கூட்டணி கட்சியினர் பல்வேறு அமைப்பினர் பொதுமக்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )