வாடகைத்தாய் மூலம் நயன்தாரா குழந்தைப் பெற்ற விவகாரத்தில் நடவடிக்கை.
வாடகைத்தாய் மூலம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் குழந்தை பெற்ற விவகாரத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் தலைமையில்,
3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன், “வாடகைத்தாய் விவகாரத்தில் தேவைப்பட்டால் நயன்தாரா – விக்னேஷ் சிவனிடம் விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
மேலும், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீதான புகார் குறித்து விசாரணை அறிக்கை வந்ததும்,
எந்த மாதிரியான விதிமுறை மீறல் மற்றும் முரண்பாடுகள் உள்ளன என்பதை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
CATEGORIES அரசியல்
TAGS Minister ma.subramaniyanNayanthara Childதமிழ்நாடுதலைப்பு செய்திகள்நயன்தாராவாடகை தாய்விக்னேஷ் சிவன் நயன்தாரா