அதிமுகவின் 50 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
அதிமுகவின் 50 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் 51 வது ஆண்டு தொடக்க விழா முன்னிட்டு முன்னாள் முதல்வர் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைப்படி முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அறிவுறுத்தலின்படி,
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டையாபுரம் பேரூராட்சியில் எம்ஜிஆர் திருவுருவச் சிலைக்கு அதிமுக எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜ்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
CATEGORIES தூத்துக்குடி