BREAKING NEWS

தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் திடீரென கடலில் பச்சை பச்சையாக தண்ணீர் காட்சியளிப்பதால் மீனவர்கள் அச்சம்.

தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் திடீரென கடலில் பச்சை பச்சையாக தண்ணீர் காட்சியளிப்பதால் மீனவர்கள் அச்சம்.

 

தூத்துக்குடியில் பள்ளி, கல்லூரி விடுமுறை நாட்களில் அதிகபடியாக குடும்பத்தினர் பலரும் தங்களது குடும்பத்தினருடன் கடற்கரை பகுதிகளில் சுற்றி திரிவது,அங்கு அமர்ந்து பேசுவது,கடலில் குளிப்பது போன்று பொழுபோக்கினை கழிப்பது வழக்கம்..

 

 

அந்த வகையில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொதுமக்கள் மாலை நேரத்தில் தூத்துக்குடி புதிய துறைமுகம் கடற்கரைக்கு குடும்பத்தினருடன் சென்றனர். அப்போது வழக்கத்திற்கு மாறாக கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சியளித்தது.

 

மேலும் கடல் அலைகளின் வேகம் அதிகமாகவும் ஆக்கிரோஷமாகவும் காணப்பட்டதால் பொதுமக்கள் அங்கு செல்ல அச்சம் கொண்டனர். மேலும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.

 

 

சுனாமிக்கு பிறகு அவ்வப்போது கடலில் பல்வேறு பருவநிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது இந்த நிலையில் தூத்துக்குடி புதிய துறைமுக கடற்கரை பகுதியில் கடல் பச்சை பச்சையாக காணப்பட்டது. மீனவர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

தூத்துக்குடி கடற்கரையிலிருந்து சுமார் ஏழு கடல் மேல் தூரத்திற்கு கடல் நீர் குறைந்த காரணத்தால் கடலில் அடியில் உள்ள பாசிகள் தண்ணீருடன் கலந்து வெளியே வருவதால் கடல் பச்சை பச்சையாக காட்சியளிப்பதாகவும் இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது என மீனவர்கள் அச்சம் தெரிவித்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )