பந்தநல்லூர் கடை வீதியில் முன்னாள் எம்.பி.பாரதிமோகன் தலைமையில் அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் சாலை மறியல் போராட்டம்.

தஞ்சாவூர்,
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து பந்தநல்லூரில் முன்னாள் எம்பி பாரதிமோகன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தடையை மீறி சென்னையில் போராட்டம் நடத்தியதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
கைது நடவடிக்கையை கண்டித்து பெரும்பாலான பகுதிகளில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
பந்தநல்லூர் கடை வீதியில் முன்னாள் எம்.பியும் திருப்பனந்தாள் ஒன்றிய கழக செயலாளருமான பாரதி மோகன் தலைமையில் ஒன்றிய செயலாளர் கருணாநிதி முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர், இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
எடப்பாடி பழனிச்சாமி கைது நடவடிக்கையை கண்டித்து பந்தநல்லூர் கடைவீதியில் நடந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.