BREAKING NEWS

செங்குளம் பகுதியில் கபாலிபாறை ஊராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா. 

செங்குளம் பகுதியில் கபாலிபாறை ஊராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா. 

 

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்குளம் பேருந்து நிலையம் அருகில், கபாலிபாறை ஊராட்சி, பசுமை தோழர்கள் அறக்கட்டளை மற்றும் தேசிய கல்வி அறக்கட்டளை சார்பில் 350 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. 

 

 

இதில் சிறப்பு விருந்தினராக நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். 

 

 

இதில் பாப்பாக்குடி யூனியன் துணை சேர்மன் மாரிவண்ணமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், கபாலிபாறை பஞ்சாயத்து தலைவர் கஸ்தூரி, பாப்பாக்குடி பஞ்சாயத் தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன்,

 

 

பசுமை தோழர்கள் அறக்கட்டளை நிறுவனர் சுப்புராஜ் செயலாளர் முகம்மது இஸ்மாயில், டிரஸ்டி சங்கர், ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், ஊராட்சி செயலாளர் இசக்கி, திட்ட ஒருங்கிணைப்பாளர் துர்க்கைராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )