BREAKING NEWS

பழனி நகர் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பழனி நகர் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர அனைத்து வணிகர் சங்க பேரமைப்பின் சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

இதில் பேசிய சங்கத்தின் கௌரவ தலைவர் ஹரிஹர முத்து, சீன பட்டாசுகளை புறக்கணிப்பது, தமிழகத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும், வணிகர் சங்கம் சார்பாக பழனியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தார்.

 

 

தொடர்ந்து பேசிய சங்கத்தின் தலைவர் ஜே பி சரவணன் பழனியில் ,பல வணிகர் சங்கங்கள் இருந்தாலும் வணிகர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முதல் முதலாவதாக குரல் கொடுப்பது இந்த சங்கம் மட்டுமே. மேலும் இதில் 60க்கும் மேற்பட்ட கிளைச் சங்கங்கள் உள்ளது என தெரிவித்தார்.

 

 முன்னதாக இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் சங்கத்தின் பொதுக்குழு அழைப்பிதழ் விழா வெளியீட்டு விழா நடைபெற்றது.

 

 

முன்னதாக பழனியில் நடைபெறும் பொதுக்குழுவில் சங்கத்தின் மாநில தலைவர் விக்ரமராஜா கலந்து கொள்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )