BREAKING NEWS

வேப்பூர் அருகே ஆம்புலன்ஸில் பிறந்தது அழகான பெண் குழந்தை.

வேப்பூர் அருகே ஆம்புலன்ஸில் பிறந்தது அழகான பெண் குழந்தை.

செய்தியாளர் கொ. விஜய்.

 

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் சிறுப்பாக்கம் அடுத்துள்ள வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஷிகா அவருக்கு வயது 22, நிறைமாத கர்ப்பிணியான இவர் நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டது உடனே 108 ஆம்புலன்சுக்கு தொடர்பு கொண்டனர், உடனே அவரது வீட்டிற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் அவரை ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றது.

 

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்ஸிலேயே ராஷிகாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதில் தாய் மற்றும் சேய் நலமுடன் ஆரோக்கியமாக உள்ளனர்.

 

அப்போது ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் நித்யா சிறப்பாக செயல்பட்டு மருத்துவ உதவி புரிந்ததாக தாய் ராஷிகா நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார்.

 

இதனை அறிந்த ராஷிகாவின் உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் நித்யா அவர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )