BREAKING NEWS

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பெருந்திரளாக முறையீடு ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பெருந்திரளாக முறையீடு ஆர்ப்பாட்டம்.

 

தேனி செய்தியாளர் முத்துராஜ்.

 

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேனி மாவட்டம் சார்பாக, தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாகவும் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் மாநில இணை செயலாளர் சசிகலா தலைமையில், தமிழ்நாடு அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் சங்கத்தைச் சேர்ந்த தேனி மாவட்டத்தில் பணிபுரியும் 70க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

 

 

1. தமிழக சுகாதார கட்டமைப்பை சீர்குலைக்கும் GO எண் 288 மற்றும் G.O எண் 392-ஐ திரும்பப் பெற வேண்டும்.

 

2. ஊரக மக்கள் நலம் பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்ட துணை சுகாதார நிலையங்களில் MLHP நியமனம் என்பதை வேறு இடத்தில் ஏற்படுத்தி MLHP மற்றும் VHN -இடையில் ஏற்படும் மோதல் போக்கை தடுக்க வேண்டும்.

 

3. கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொள்ளும் துறை சார்ந்த பணிகளை MLHP-கள் பணி மேற்கொண்டதாக ஸ்கோர் போடச்சொல்லி SHN மற்றும் CHN – களை மிரட்டும் போக்கை கைவிட வேண்டும்.

 

4.மாநகர/நகர சுகாதார செவிலியர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வு இன்றி பணிபுரிவதை சுட்டிக்காட்டி இயக்குனர் பொது சுகாதாரம் அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட றீக்ஷிஹி பதவி உயர்வு வழங்க மாநகராட்சி / நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 

5. முற்றிலும் பழுதடைந்த குடியிருக்க லாயக்கற்ற இடித்து வேறு இடத்திற்கு டெண்டர் விட்ட துணை மைய கட்டிடங்களுக்கு வாடகை பிடித்தம் செய்து VHN-களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்துவதை உடன் தடுத்து நிறுத்த வேண்டும்.

 

6. குடியிருக்க லாயக்கற்ற துணைமைய கட்டிடத்திற்கு பிடித்தம் செய்த வாடகை தொகையை திரும்ப வழங்க வேண்டும்.

 

7. VHN மற்றும் ANM -களுக்கான இட மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு தான் விரும்பிய இடங்களை தேர்வு செய்த ANM களுக்கு இடம் மாறுதல் உத்தரவுகளை காலம் தாழ்த்தாமல் உடன் அனுப்ப வேண்டும்.

 

 

8. பொது சுகாதாரத்துறை இயக்குனரால் அரசுக்கு பரிந்துரைத்த 42 சுகாதார மாவட்டங்களுக்கு 42 CHN-பதவிகளை ஏற்படுத்த ஏற்படுத்த வேண்டும்.

 

9. பொது சுகாதாரத்துறை இயக்குனரால் அரசுக்கு பரிந்துரைத்த 42 சுகாதார மாவட்டத்திற்கு 42 DMCHO பதவிகளை ஏற்படுத்தி CHN பதவி உயர்வு தேக்க நிலையை போக்க வேண்டும்.

 

10.கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டு பணிபுரிந்த முன்களப்பணியாளர்களான மாநகர / நகர சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள். பகுதி சுகாதார செவிலியர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள் ஆகிய விடுபட்டவர்களுக்கு முன்களப்பணியாளர் களுக்கான ஊக்கத்தொகையை உடன் வழங்க வேண்டும்.

 

என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு, அது தொடர்பாக கண்டன கோஷங்களை எழுப்பி தமிழக அரசுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

 

மேலும் இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )