BREAKING NEWS

பவானி, கவுந்தப்பாடி அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் இருவர் மருத்துவ கல்லூரிக்கு தேர்வானதை தொடர்ந்து பவானி எம்.எல்.ஏ. கருப்பணன் உதவி தொகை வழங்கி பாராட்டினார்.

பவானி, கவுந்தப்பாடி அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் இருவர் மருத்துவ கல்லூரிக்கு தேர்வானதை தொடர்ந்து பவானி எம்.எல்.ஏ. கருப்பணன் உதவி தொகை வழங்கி பாராட்டினார்.

 

ஈரோடு மாவட்டம் பவானி அருகிலுள்ள கவுந்தப்பாடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவர்களான நவீன் குமார், லோகேஷ் ஆகியோர் அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் பயில தேர்வாகினர்.

 

அதனைத் தொடர்ந்து கவுந்தப்பாடி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற பவானி சட்டமன்ற உறுப்பினர் கே.சி. கருப்பண்ணன் இரு மாணவர்களுக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி ஊக்கத்தொகை வழங்கினார்.‌ 

 

இதில் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகளான டாக்டர் பாலுசாமி டாக்டர் சந்திரகாசன் கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி மற்றும் மதியழகன் நந்தகோபால் சேகர் சதாசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

முடிவில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )