சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்.

செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்ட கழக செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் வி.பி.ராஜன் அவர்களும், ஒப்பிலாமணி அவர்களும் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் சிவகங்கை மாவட்ட கழக துணைச் செயலாளர் சேங்கைமாறன் அவர்கள் உள்ளிட்ட,..

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட கழக முன்னோடிகள், ஒன்றிய, பேரூர், நகர, கிளை கழக செயலாளர்கள், பல்வேறு அணி அமைப்பாளர்கள், கழக உடன்பிறப்புகள் பெரும்பாலோர் கலந்துகொண்டனர்.
CATEGORIES சிவகங்கை
TAGS Dmkஅமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்அரசியல்இந்தி திணிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திமுக
