ஆத்தூர் அருகே பொது கழிப்பிட பகுதியில் 5 அடி நீளமுள்ள மண்ணுளிப் பாம்பு,தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்பு
சேலம் மாவட்டம் ஆத்தூர் ஜோதி நகர் முத்துலட்சுமி தெருவில் உள்ள பொதுக்கழிப்பிடத்தின் அருகே கருப்பு வண்ணத்தில் சாக்கு பை போல் சுருண்டு கிடந்ததை அங்கு கழிப்பிடத்திற்குச் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளார்கள்.
அதனை அங்கிருந்து இளைஞர்கள் சிலர் தடியால் தூக்கிப் பார்த்தபோது அது 5 அடி நீளத்தில் 20 கிலோ எடை கொண்ட மண்ணுளிப் பாம்பு என்பது தெரியவந்தது .
அதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆத்தூர் தீயணைப்பு துறையினர்க்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த நிலைய சிறப்பு அலுவலர் செல்ல பாண்டியன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் மண்ணுளிப் பாம்பை உயிருடன் பிடித்து அதனை சாக்கு பையில் போட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
வனத்துறையினர் அந்த மண்ணுளிப் பாம்பை முட்டல் வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.
CATEGORIES சேலம்