ஸ்ரீவைகுண்டம் அருகே குளத்தில் மூழ்கி இரண்டு இளம் பெண்கள் பலி.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளை நயினார் புரத்தை சேர்ந்தவர் தேவராஜ் சண்முகத்தாய் தம்பதியினர். இவர்களுக்கு சுடலைக்கனி, வள்ளி, திவ்யதர்ஷினி என்ற மூன்று பெண் குழந்தைகள் உள்ளன.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சண்முகத்தாய் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார். அவரின் 16 ஆம் நாள் காரிய நிகழ்ச்சி நேற்று நயினார்புரத்தில் நடந்துள்ளது.
அந்த நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் இன்றைய தினம் சிவகளை பெரிய குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அவருடன் மூத்த மகள் சுடலை கனி மற்றும் உறவினர்கள் பெண்கள் என ஏராளமானோர் சென்றுள்ளனர்.
அதில் ஆறுமுகநேரியை சேர்ந்த கோகிலா என்ற 12 வயது சிறுமி திடீரென குளிக்கும்போது சகதியில் சிக்கியுள்ளார்.
அவரை காப்பாற்றுவதற்காக சுடலை கனி உள்ளே இறங்கியுள்ளார். அப்போது இருவரும் சகதியில் சிக்கியுள்ளனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் அவர்கள் நீரில் மூழ்கினர். இதற்கிடையில் இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதற்குள் சுடலை கனியை மட்டும் அங்கிருந்தவர்கள் சுயநினைவின்றி மீட்டனர்.
அதன் பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போராடி கோகிலாவை இறந்த நிலையில் மீட்டனர்.
இதற்கிடையில் சிகிச்சைக்காக செல்லும் வழியிலேயே சுடலைக்கனி உயிரிழந்தார்.
தற்போது இருவரது உடலும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் Gifts பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இருவரின் உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழும் காட்சி அனைவர் மனதையும் கரைய வைக்கிறது.