BREAKING NEWS

சின்னகொக்கூர் கிராமத்தில் கன்னியம்மன் மாரியம்மன் காளியம்மன் ஆலயங்களில் ஜீர்னோதாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்.

சின்னகொக்கூர் கிராமத்தில் கன்னியம்மன் மாரியம்மன் காளியம்மன் ஆலயங்களில் ஜீர்னோதாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்.

 

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா சின்னகொக்கூர் கிராமத்தில் கன்னியம்மன் மாரியம்மன் காளியம்மன் ஆலயங்களில் ஜீர்னோதாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது ஐந்தாம் தேதி தொடங்கி முதல் கலா யாகசாலை பூஜை கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் நடந்தது.

 

 

நேற்று நான்காம் கலா யாகசாலை பூஜைகள் ஜபம் ஹோமம் பூர்நாகுதி தீபாராதனை தொடர்ந்து புனித நீர் அடங்கிய கரங்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஆலய கோபுரகலசத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகமும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

 

 

உடன் மகா அபிஷேக தீபாராதனையும் நடைபெற்றது வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அருள் பிரசாதமும் வழங்கப்பட்டது இதில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 

அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க பாலையூர் காவல் நிலைய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )