தேசிய அளவிலான வில்வித்தை போட்டிக்கு தஞ்சாவூர் மாவட்டத்தில் 4 பேர் தேர்வு, மாவட்ட ஆட்சியர் பாராட்டு.
தஞ்சாவூர்,
கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை சென்னை எம்ஜிஆர் ஜானகி அம்மாள் மகளிர் கல்லூரியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது.
இதில் விளையாட்டு துறை சார்பில் தஞ்சை மாவட்ட வில்வித்தை சங்கம் மற்றும் ஏஒய்ஏ ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் 30 விளையாட்டு வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர் இப்போட்டியில் 2 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் ஆகிய பதக்கங்களை பெற்றனர், மீதமுள்ளவர்கள் தகுதிச் சான்று பெற்றுள்ளனர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற 4 பேர் டிசம்பர் மாதம் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள், இதனையடுத்து வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து பதக்கங்கள் மற்றும் சான்றிதழை காண்பித்து பாராட்டு பெற்றனர்.
மாவட்ட ஆட்சியர் இவர்களை வாழ்த்தி கௌரவித்தார் இதில் வில்வித்தை சங்க சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பயிற்சியாளர்கள் அஜய் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.