நத்தம் அருகே கலையரங்கம் அமைக்க பூமிபூஜை..!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மெய்யம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து 9 லட்சம் மதிப்பீட்டு புதிய கலையரங்கம் அமைப்பதற்கான பூமிபூஜையை முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் தலைமை தாங்கி பூமி பூஜை நடைபெற்றது.
இதில் நகர செயலாளர் சிவலிங்கம், தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், மாவட்ட ஜெயலலிதா பேரவைஇணை செயலாளர் ஜெயபாலன், மாவட்ட மாணவரணி இணை செயலாளர் அசாருதீன், மாவட்ட கவுன்சிலர் பார்வதி, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரகாஷ்,
நகர அவைத் தலைவர் சேக்ஒலி, பொருளாளர் சீனிவாசன், உலுப்பகுடி கூட்டுறவு பால்பண்ணை தலைவர் சக்திவேல், பேரூராட்சி கவுன்சிலர்கள் சிவா, கண்ணன், பழனிகுமார், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் குப்பான் மீனாட்சிபுரம் கிளை நிர்வாகிகள் வேலு, மாரிமுத்து உள்ளிட்ட ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
CATEGORIES திண்டுக்கல்
TAGS 9 லட்சம் மதிப்பீட்டு புதிய கலையரங்கம் பூமிபூஜைஅரசியல்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திண்டுக்கல் மாவட்டம்திமுகநத்தம்