பேரணாம்பட்டு சிவராஜ் நகர் வேம்புலிஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு வி கோட்டா ரோட்டில் உள்ள வேதவள்ளி சமேத வேம்பு ஈஸ்வரர் கோவிலில் ஐப்பசி அண்ண அபிஷேக பூஜை நடந்தது.
இதனையொட்டி மூலவரான வேம்புலிஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் அண்ண அபிஷேகமும் வேதவல்லி தாயாருக்கு காய்கறிகளாலும் மற்றும் பழங்களாலும் சாகம்பரி அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை பூஜை செய்யப்பட்டது.
இதில் பேரணாம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பத்தல பல்லி பாலூர் எருக்கம்பட்டு கொத்தூர் மச்சம்பட்டு அறவட்டலா கொத்த பள்ளி சாத்கர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.
விழாவில் (ஆயிரம்) 1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகிகளான எஸ்.சுந்தர், டி.முரளி வி.சிவராமன், எஸ்.ரவிசங்கர் ஆகியோர்கள் செய்திருந்தனர்.
CATEGORIES வேலூர்