BREAKING NEWS

தென்காசி திமுக நிர்வாகி அக்கட்சியிலிருந்து விலகி எம்எல்ஏ. முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனா்!

தென்காசி திமுக நிர்வாகி அக்கட்சியிலிருந்து விலகி எம்எல்ஏ. முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனா்!

செங்கோட்டையில் உள்ள தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வைத்து, வாசுதேவநல்லுார் தெற்கு ஒன்றிய கழக செயலாளா் வக்கீல்துரைப்பாண்டியன் தலைமையில், ஓபிஎஸ் அணியில் மாவட்ட கழக பொருளாளராக பதவி வகித்த முருகையா அப்பதவியிலிருந்து விலகி,

 

தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளரும், கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா முன்னிலையில், அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதேபோல் வடகரையை சேர்ந்த திமுக நிர்வாகி கண்ணன் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

 

ஓ.பி.எஸ் மற்றும் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நிர்வாகிளுக்கு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

 

இந்த நிகழ்ச்சியில் வாசுதேவநல்லுார் ஒன்றிய அவைத்தலைவா் அண்ணாத்துரை, ஒன்றிய பேரவை செயலாளா் சாமிவேல், ஒன்றியத்துணைச்செயலாளா் முத்துவேல்சாமி, ஒன்றிய சிறுபான்மை அணி செயலாளா் முகம்மதுநியாஸ், விசாலாட்சிமுருகன், பெரியதுரை, பேரூர் கழக அவைத்தலைவா் நீராவி, பேரூர் கழக பொருளாளா் திவான், முருகையா, மாடசாமி மற்றும் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )