திருச்சி சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் திருச்சியில் ஆய்வு செய்த குழுவினர்.

திருச்சி சட்டமன்ற பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையிலான குழு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று ஆய்வு செய்கின்றனர்.
தற்போது திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வில் குழுவின் உறுப்பினர்களான வேல்முருகன், சிந்தனை செல்வன், சரஸ்வதி உள்ளிட்ட குழுவின் உறுப்பினர்கள் உள்ளனர்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் செயல்பட்டு வரும் பல்வேறு துறைகளுக்கு நேரடியாக சென்ற பொது கணக்கு குழு மருத்துவ சிகிச்சை மற்றும்.,
செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ததோடு அங்குள்ள பொதுமக்களிடம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து நிறை குறைகளை கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து கோ.அபிஷேகபுரம் பகுதியில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டு துறையின் கீழ் பணியாற்றும் பெண்கள் தங்கும் விடுதியை ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்த குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.