விருத்தாச்சலம் அடுத்துள்ள வடவாடி சாலையில் பேருந்து பயணிகள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மோதல்.!

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த சின்ன வடவாடி கிராமத்தில் அரசு பேருந்து பயணி மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
பேருந்தில் அதிக அளவு கூட்டம் இருந்ததால் பள்ளி மாணவர்கள் படியில் தொங்கியபடி பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தன.
அப்போது வயலூர் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்து வந்த போது பேருந்து நிறுத்தத்தில் பள்ளிக்குச் செல்ல காத்திருந்த மாணவர்கள் மற்றும் அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் பேருந்து ஏற முடியாததால் பேருந்தில் தொங்கிக் கொண்டே இருந்த மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இரு தரப்பினருக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது இதனால் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த விருதாச்சலம் உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பேருந்தை அனுப்பி வைத்தனர்.
இதன் காரணமாக தாக்குதலில் காயம் அடைந்த ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விருத்தாச்சலம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் வயலூர் பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.