BREAKING NEWS

தீவிரவாத செயல்களைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா வலியுறுத்தல்.

தீவிரவாத செயல்களைத் தடுக்க கடும் நடவடிக்கை தேவை  இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா வலியுறுத்தல்.

 

தஞ்சாவூர், தீவிரவாத செயல்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் அகில பாரத அனுமன் சேனா அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

 

தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் இந்த அமைப்பின் தென்னிந்திய செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

 

இதில், தீவிரவாத செயல்களால் பல நாடுகள் வளர்ச்சியடையாமல் பஞ்சத்தில் பரிதவித்து வருகிறது. இதேபோல, இந்தியாவையும் தீவிரவாத தாக்குதல் மூலம், நிலை குலைய செய்ய வைப்பதற்காகப் பல்வேறு முயற்சிகள் நடைபெறுகின்றன.

 

கோவையில் கார் குண்டு வெடிப்பு, மங்களூரு குண்டு வெடிப்பு என தென்னிந்தியா முழுவதும் பெட்ரோல் குண்டு தாக்குதல் போன்ற தீவிரவாத செயல்கள் நிகழ்கின்றன. இந்த விஷயத்தில் அரசியல் கட்சிகள் வாக்கு அரசியலை பார்க்காமல் கடுமையான நடவடிக்கையை காவல் துறை மூலம் எடுக்க வேண்டும்.

 

 

நகர்புற வளர்ச்சியால் விவசாய நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது. இதே நிலை நீடித்தால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும். எனவே போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு எந்த வகையான விளை பொருட்களாக இருந்தாலும், அவற்றை இலவசமாக வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

இக்கூட்டத்துக்கு அமைப்பின் தேசியத் தலைவர் எஸ்.வி. ஸ்ரீதரன் தலைமை வகித்தார். தேசியத் துணைத் தலைவர் ஓம் பரமானந்த பாபாஜி, செய்தி தொடர்பாளர் பத்மஜா முருகையன், மாநிலத் தலைவர் கோவிந்தராஜ், மாநில முதன்மைப் பொதுச் செயலர் பாலா, ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், மாவட்டத் தலைவர் ரவி உள்பட தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களிலிருந்து நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )