BREAKING NEWS

கொடைக்கானல் அருகே வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் கொடுப்பதில் தாமதம் விவசாயிகள் புகார்.

கொடைக்கானல் அருகே வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் கொடுப்பதில் தாமதம் விவசாயிகள் புகார்.

திண்டுக்கல் மாவட்டம்,

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சியிலுள்ள அட்டுவம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது இந்த சங்கத்தில் வில்பட்டி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி பள்ளங்கி, பாயாச கடை ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த 100−க்கும் மேற்பட்ட விவசாயிகள் உள்ளனர்.

 

 

இந் நிலையில் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விசாயிகள் கடன் பெற்று அந்தக் கடனை முற்றிலுமாக திரும்ப செலுத்தியுள்ளனர். இந் நிலையில அதே வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் விவசாய உறுப்பினர்கள் 50000,மற்றும் ஒரு லட்சம் கடன் கேட்டுள்ளனர்.

 

 

இந் நிலையில் அட்டுவம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தலைவராக இருக்கும் செந்தில் மற்றும் சங்க செயலாளர் ஆகியோர் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்குவத்ற்கு பல வாரங்களாக விவசாயிகளை அலைக்கழிப்பு செய்து வருகிறார். இதனால் இன்று 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையாகும்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )