BREAKING NEWS

மாற்றுத்திறனாளிகளுக்கு இடையேயான அமர்வு வாலிபால் போட்டி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு இடையேயான அமர்வு வாலிபால் போட்டி மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சான்சிலர் தெரபி மாநில அளவிலான அமர்வு வாலிபால் போட்டி. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அணிகள் பங்கு பெறுகின்றன. இன்று தொடங்கிய இப்போோட்டி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

 

 

“பேரா வாலிபால் சாம்பியன்ஷிப் 2022” போட்டியில் தஞ்சை வேலூர் சென்னை கடலூர் விழுப்புரம் கோவை நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 9 ஆண்கள் அணி 6 பெண்கள் அணி பங்கு பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு நாளை சான்றிதழ் மற்றும் கோப்பை வழங்கப்பட இருக்கிறது.  இதில் வெற்றி பெறும் அணிகள் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற இருக்கின்றன.

 

 

இந்தப் போட்டியை தொடங்கி வைத்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தானும் மாற்றுத்திறனாளி போல் அமர்ந்து விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )