தஞ்சை மாநகர தி.மு.க. அலுவலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.

மழை பெய்கிறதோ மழை பெய்யவில்லையோ whatsapp குழு மூலமாக அனைத்து அதிகாரிகளும் எப்போதும் தயார் நிலையில் இருக்கிறார்கள் அதன் மூலமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவ்வப்போது கொடுக்கப்பட்டு வருகிறது பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி..
தஞ்சை மாநகர தி.மு.க. அலுவலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்கள் பேட்டியில். மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கேள்விக்கு மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நானும் உள்ளேன்.
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும் விவரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அந்த குழுவில் பகிரப்படும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் நேரத்தில் எவ்வளவு தண்ணீர் செல்கிறது பொது மக்களுக்கு எவ்வாறு அறிவுரை வழங்கலாம் என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முடிவு செய்வர். அந்த வாட்ஸ் அப் குழு எப்போதும் செயலிலே இருக்கும். என தெரிவித்தார்.